பிறை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் வசதிக் குறைந்தோரின் தோழனாகத் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

img 20241015 wa0055

பிறை – இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதிக் குறைந்தோர் என
மொத்தம் 400 பேர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது.

img 20241015 wa0059
மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிக்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டி
தீபாவளி பரிசுக்கூடைகள் எடுத்து வழங்கினார்.

மேலும், கடந்த 16 ஆண்டுகளாகத் தவறாமல் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசுக்கூடைகளை வழங்கும் இந்த ஆலயத்தின் முன்முயற்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
img 20241015 wa0063

“இந்து சமூகத்திற்கும், இந்த ஆலய பக்தர்களுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொண்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
img 20241015 wa0033

“இதன் மூலம், இந்துச் சமூகம் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவ வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

“தனிநபர், பெருநிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பல பங்களிப்பாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இந்த சமூகநலத் திட்டங்களை வழிநடத்த ஆலய நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க முன்வருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்கிறேன்,” என்று ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 2024 தீபாவளி பரிசுக்கூடை வழங்கும் விழாவில் சாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

img 20241015 wa0071
மேலும், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தராஜூ; ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய தலைமை அறங்காவலரும், மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின் தலைவருமான டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்; ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் தலைவர், மேஜர் சேகரன்
அத்துடன் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

“மக்களிடம் பெறும் நன்கொடைகள் மீண்டும் மக்களிடமே வழங்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் செயல் பாராட்டக்குரியது.

img 20241015 wa0041
“பிறை தொகுதியில் கடற்கரை காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயத்தில், ஈமக்கிரிகை நடத்த சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கை வரவேற்கப்படுகிறது.

“மேலும், பினாங்கு மாநிலத்தின் பிற நான்கு மாவட்டங்களிலும் ஈமக்கிரிகை
மேற்கொள்ள சிறப்பு தலம் நிர்மாணிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆண்டு நாங்கள் ரிம150,000 நிதி ஒதுக்கீட்டில் பாரம்பரிய உடைகள், பண்டிகை பணம் மற்றும் 400-க்கும் மேற்பட்ட பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன என்று ஆலயத் தலைவர் மேஜர் சேகரன் கூறினார்.

புக்கிட் மெர்தாஜம் அருகே பல்நோக்கு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டம் உள்ளூர் சமூகத்திற்கு பயனளிக்கும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுவினர்(B40) பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளை நடத்துவதற்கு துணைபுரியும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடன பயிலும் சிறுவர்களின் பாரம்பரிய பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் விழாவை சிறப்பிக்கப்பட்டது.

படம் 1: மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோறுக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் பரிசுக்கூடைகளை மாநில முதலமைச்சர் எடுத்து வழங்கினார். (உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்).