பிறை ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய குடும்ப தின விழா

பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் குடும்ப தின விழா அண்மையில் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கேளிக்கை ஓட்டம், சுகாதார முகாம், இரத்த தானம் முகாம் போன்ற நிகழ்வுகள் பிரத்தியேகமாக பொதுமக்களின் நன்மைக்காக பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் துணையுடன் இனிதே நடைபெற்றது.

இரத்த தான முகாமில் கலந்து கொண்ட மாதுவிற்கு பரிசுக்கூடை வழங்கினார் பேராசிரியர் ப.இராமசாமி

இந்நிகழ்வில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் ராஜ், பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் நந்தகுமார் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், பிறை, ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் முயற்சியில் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் 40 மாணவர்களுக்கு மேற்கல்வி தொடர ஊக்கத்தொகை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரின் பொற்கரத்தால் எடுத்து வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தின் இம்முயற்சியை தாம் மனமார பாராட்டினார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி.